search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் வழக்கு"

    • நேற்று முன்தினம் வீட்டில் இருந்த அந்த மாணவி திடீரென மாயமானார்.
    • இதுகுறித்து மாணவியின் தாய் சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    சேலம்:

    சேலம் செவ்வாய்ப்–பேட்டை சித்தர் கோவில் மெயின் ரோடு அருகே உள்ள பகுதிைய சேர்ந்த 17 வயது மாணவி தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த அந்த மாணவி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்ததில் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 20) என்பவர் மாணவியை கடத்திச் சென்றது தெரியவந்தது.இதுகுறித்து மாணவியின் தாய் சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை கடத்திய வாலிபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • பழனிவேல் தனது தாய் அசோதைக்கு சாப்பாடு போடாமல் ஜீவனாம்சம் தராமல் அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியே அனுப்பி உள்ளார்.
    • அசோதை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே நடுவீரப்பட்டு பெரிய நரிமேடு சேர்ந்தவர் அசோதை (வயது 85). இவரது மகன் பழனிவேல் (வயது 50). இந்த நிலையில் பழனிவேல் தனது தாய் அசோதைக்கு சாப்பாடு போடாமல் ஜீவனாம்சம் தராமல் அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியே அனுப்பி உள்ளார்.

    இது குறித்து தாய் அசோதை தனது மகன் பழனிவேல் (வயது 50), மருமகள் உஷா (வயது 42) ஆகியோர் மீது கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×